என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Barges"
- விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.
- கடலுக்கு செல்வதற்காக தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளது.
இந்த விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் 14 ந்தேதி முடிய மீன்கள் இனப்பெருக்க காலமாக கண்க்கிடபட்டு விசைப்படகுகள் மீன் பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகு கள் கரைக்கு ஏற்றி மராமத்து செய்யப்பட்டு புதிய வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது.
மீன்பிடி வலைகள் சரிபார்க்கப்பட்டது.
ஜூன் 14 புதன்கிழமை நேற்றுடன் தடைகாலம் நிறைவடைந்தா லும் இன்று(வியாழக்கிழமை) என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.
விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் தான் கடலுக்கு செல்ல முடியும்.
எனவே வருகிற 17-ந்தேதி சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு செல்வதற்காக விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல் மற்றும் மீன் பிடி வலை உள்ளிட்ட தளவாட பொருட்களை ஏற்றி மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
இதனால் தடைகாலம் முடிந்தும் கூடுதலாக 2 நாள்கள் சேர்த்து 63 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவ ர்கள் கடலுக்கு மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர்.
- இன்னும் 10 நாளில் மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளது.
- மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேராவூரணி:
தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி முடிய 60 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க நடைபெற மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிபட்டினம் துறைமுகத்தில் 147 விசைப்படகுகள் உள்ளது. விசைப்படகுகள் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்னும் 10 நாளில் மீன் பிடி தடைக் காலம் முடிய உள்ள நிலையில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து புதிய வர்ணம் பூசும் பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்