search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam Citizenship"

    உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் குடியேறி இருக்கிறார்கள். இதனால் யார் உண்மையான இந்தியர்கள், யார் வங்காள தேசத்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே இதை உறுதி செய்வதற்காக தேசிய குடியுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேருடைய பெயர் இடம்பெறவில்லை. அதாவது அந்த 40 லட்சம் பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    ஆனால் இதில் உண்மையான இந்தியர்கள் பலருடைய பெயரும் உள்ளது. கணக்கெடுப்பில் நடந்த குளறுபடி காரணமாக அவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

    அவர்களை தற்போது தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தின்சுகியா மாவட்டத்தில் தினேஷ் என்பவரையும், அவரது மனைவியையும் இந்தியர்கள் அல்ல எனக்கூறி தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஆனால் இவர்களுடைய பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். 1945-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இருந்து தினேசின் தந்தை பரசுராமன், அவரது தாயார் ஜோத்கிதேவி ஆகியோர் அசாமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு தும்சிகா மாவட்டத்தில் விவசாய தொழில் செய்து பிழைத்து வந்தனர். அவர்களுக்கு தினேஷ், ராஜேஷ் என்ற 2 மகன்களும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன.

    தற்போது கணக்கெடுப்பு நடந்தபோது தினேசும், அவரது மனைவியும் இதற்கான தீர்ப்பாயத்தில் பங்கேற்று தங்களை பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களை வெளிநாட்டவராக கருதி தடுப்பு முகாமில் தங்க வைத்தனர்.

    மகனை தடுப்பு முகாமில் தங்க வைத்ததால் தாயார் ஜோத்கிதேவி அதிர்ச்சி அடைந்தார். தினேசுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களை இவர் தான் கவனித்து வந்தார். மகனும், மருமகளும் தடுப்பு முகாமுக்கு சென்றதால் மன வேதனையில் அவருக்கு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கணக்கெடுப்பு குளறுபடியால் உண்மையான இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

    அசாமை சேர்ந்த போஜ்பூரி மாணவர் இயக்கமும் ஜோத்கிதேவி மரணத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து உள்ளது. #AssamNRC

    அசாமில் குடியுரிமை பட்டியல் வெளியிடப்பட்டதும் பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #AssamCitizenship

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 3 கோடிய 29 லட்சம். ஆனால் இதில் பெரும்பாலோர் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து குடியேறியவர்கள்.

    அவர்களை இந்திய குடிமகன்களாக கருதக் கூடாது என உள்ளூர் மக்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அசாமில் பல தடவை கலவரம் ஏற்பட்டுள்ளது.

    இதில் யார் உண்மையான இந்திய குடிமகன் என்பதை கண்டறிய ஏற்கனவே 1951-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் அது முழுமை பெறவில்லை. 1951-க்கு பிறகும் ஏராளமான வங்காளதேசத்தினர் அசாமில் ஊடுருவினார்கள்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 25.3.1971 அன்று வரையிலும் அசாமில் குடியுருப்பதற்கான உரிய சான்றுகளை அளித்தால் அவர்கள் இந்திய குடிமகனாக கருதப்படுவார்கள் என்று இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    கணக்கெடுப்பு பணி முடிந்து கடந்த ஜனவரி மாதம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 1 கோடியே 90 லட்சம் பேர் அசாம் குடிமகன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. 1 கோடியே 40 லட்சம் பேர் பெயர் அதில் இடம்பெறவில்லை. அவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உரிய சான்றிதழ்கள் அளித்தால் மறுபடியும் சேர்த்து இறுதி பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி இறுதி பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு பட்டியல் இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள கணக்கெடுப்பு மையங்களிலும் அவற்றை வெளியிட்டனர். பட்டியலில் இடம்பெறாத நபர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என கருதப்பட்டதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    22 ஆயிரம் மத்தியபடை போலீசாரும் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டியல் வெளியிடப்பட்டதும் பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது.

    அங்குள்ள பர்பேட்டா, தாரங், திமாஹாசோ, சோனித்பூர், கரிம்கஞ்ச், கோலாகட், துப்ரி ஆகிய மாவட்டங்கள் பதட்டம் நிறைந்த இடமாக அடையாளம் காணப்பட்டது. அந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மக்கள் அமைதிகாக்க வேண்டும். இந்த பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டாலும் கூட இன்னும் வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முறைப்படி மீண்டும் விண்ணப்பித்து குடியுரிமை பட்டியலில் இடம்பெறலாம் என்று கூறியுள்ளார்.

    இன்றைய பட்டியலில் இடம்பெறாதவர்கள் வருகிற 7-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 28-ந்தேதி வரை அதற்கான விண்ணப்பத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஆதாரங்களை கொடுத்து அவர்கள் குடியுரிமை பட்டியலில் சேர்க்க வற்புறுத்தலாம். அதன்பிறகும் அவர்கள் பட்டியலில் இடம்பெறா விட்டால் வெளிநாட்டினராக கருதப்படுவார்கள்.#AssamCitizenship

    ×