என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 30 years
நீங்கள் தேடியது "30 years"
ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தின் பைலட் தற்போது 60 வயதில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். #RussianPilot
மாஸ்கோ:
ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
சோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால், அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது இவருக்கு 60 வயதாகிறது.
இவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும், தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.
தனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் சிறந்தவர்கள் என்றார். #RussianPilot
ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
சோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால், அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது இவருக்கு 60 வயதாகிறது.
இவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும், தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.
தனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் சிறந்தவர்கள் என்றார். #RussianPilot
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X