search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people commit suicide"

    • மனைவியுடன் தகராறு ஏற்பட்டு விபரீத முடிவு எடுத்தனர்.
    • 2 போலீஸ்நிலையங்களில் விசாரணை நடக்கிறது

    கோவை

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்தாஸ் ( வயது 49). இவர் கோவை இடையர் வீதியில் தங்கி அங்குள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது மனைவி சம்பள பணத்தை அனுப்புமாறு கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீபக்தாஸ் தான் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் வெரைட்டிஹால் ரோடு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தீபக் தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்டோ டிரைவர்

    இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன்(39). ஆட்டோ டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ஜலாலுதீன் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலக்கோட்டை அருகே நோய்கொடுமையால் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே மெகா சிட்டி தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 58). தச்சுத் தொழிலாளி. நோய் கொடுமையால் விஷம் குடித்து மயங்கினார்.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்தவர் பாலையா (58). கூலித் தொழிலாளி. நோய் கொடுமையால் விஷம் குடித்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சொரூபராணி விசாரித்து வருகிறார்.

    ×