search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய இணை அமைச்சர்"

    • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சந்தித்தார்.

    மேலும், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரவித்தார்.

    அதன்படி, இந்திய விமானப்படை விமானம் மூலம், உடல்களை இந்தியா கொண்டுவரப்படுகிறது.

    • மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் மத்திய அரசின் வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

    மத்திய அமைச்சரை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் பா.ஜ.க. தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான சண்முகநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு பாஜக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹேமா மாலினி, தேசிய பொதுக்குழு உறுப்பி னர் மற்றும் சிவகங்கை மாவட்ட பார்வை யாளர் சண்முகராஜா, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்தி, மாவட்ட துணை தலைவர் விஜய ராணி கருணாநிதி, மாவட்ட செயலாளர் கலை யரசி அசோக், மாவட்ட துணைத் தலைவர் சங்கீதா, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கலைவாணி, மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராத் சந்துரு, மண்டபம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, வெளிநாடு வாழ் தமிழ்மக்கள் பிரிவு மாவட்ட தலைவர் சரண்யன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாத சேதுபதி, தங்கச்சிமடம் பேக்கரும்பு சந்திரகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் மத்திய அமைச்சருக்கு மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

    ×