என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சுவாமிமலை முருகன் கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம். சுவாமிமலை முருகன் கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110011104498579_Tamil_News_swamimalai-murugan-temple-Devotees-protest_SECVPF.gif)
X
சுவாமிமலை முருகன் கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
சுவாமிமலை முருகன் கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்1 Oct 2021 5:34 AM GMT (Updated: 1 Oct 2021 5:34 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வழிபாட்டு தலங்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அரசு அறிவித்து உள்ளது.
கபிஸ்தலம் :
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் வழிபாட்டு தலங்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவித்து உள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து வைக்க வேண்டும். பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதய நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் தரிசனம் செய்ய ஏதுவாக ‘லிப்ட்’ வசதி செய்துதர வேண்டும். சுவாமிமலை முருகன் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள தங்க கோபுர கலசம் சற்று சாய்வாக உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். அனைவரையும் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சதீஷ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேதமுரளி, வாசன் வெங்கட்ராமன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் சத்யநாராயணன் நன்றி கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் வழிபாட்டு தலங்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவித்து உள்ளது. மற்ற நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து வைக்க வேண்டும். பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதய நோயாளிகளும், மாற்றுத்திறனாளிகளும் தரிசனம் செய்ய ஏதுவாக ‘லிப்ட்’ வசதி செய்துதர வேண்டும். சுவாமிமலை முருகன் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள தங்க கோபுர கலசம் சற்று சாய்வாக உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். அனைவரையும் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சதீஷ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் வேதமுரளி, வாசன் வெங்கட்ராமன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் சத்யநாராயணன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)