search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் கொடிப்பட்ட வீதி உலா நடந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

    இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டமானது 1-ம் படி, செப்பு ஸ்தலத்தார் கோபி அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து கோவிலில் சேர்ந்தது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கோவில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது, மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் வந்து சேர்கிறார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதிஉலா வந்து கோவிலில் சேர்கிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×