என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி மேல சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா
Byமாலை மலர்18 July 2018 9:24 AM GMT (Updated: 18 July 2018 9:24 AM GMT)
தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொடியேற்று விழா நேற்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
ஆடித்தபசு திருவிழா வினை முன்னிட்டு திருவிழா நாட்களில் தினமும் காலை , மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்கு தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெறும். இந்த தபசுக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்காசிக்கு வருகை தருவார்கள்.
இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி நடைபெறும். பின்னர் 3 முறை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.
இந்த விழாவில் 28 -ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.
ஆடித்தபசு திருவிழா வினை முன்னிட்டு திருவிழா நாட்களில் தினமும் காலை , மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்கு தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெறும். இந்த தபசுக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்காசிக்கு வருகை தருவார்கள்.
இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி நடைபெறும். பின்னர் 3 முறை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.
இந்த விழாவில் 28 -ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X