

எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய மலை ஏறுபவரை தைரியமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெஸ்மன் தமாங் என்ற மலையேற்ற வீரர் டூவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மீட்பு குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 8-ந்தேதி தமாங் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்த நிலையில் காணப்படுகிறார். மீட்பு பணியாளர்கள் அவரது தோள்களில் கயிற்றை கட்டி மீட்பது போன்று காட்சிகள் உள்ளது. இதுதொடர்பான அவரது பதிவில் எவரெஸ்ட் சிகரத்தில் பல துணிச்சலான மீட்புகள் நடைபெறுகின்றன.
மலை ஏறும் பருவத்தின்போது மலை ஏறுபவர்கள் மீட்கப்படுவது முன்னிலை படுத்தப்படுகிறது. ஆனால் வழிகாட்டிகளையும் மீட்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். மலையேறிகளின் கனவுகளை நனவாக்கும் வழிகாட்டிகளின் தியாகங்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அனைத்தையும் நாம் நினைவு கூற வேண்டும் என்ற குறிப்புடன் வெளியான இந்த வீடியோவை பார்த்த இணையதள பயனர்கள் மீட்பு பணியை செய்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.