என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டோம்- ரஷியா தகவல்
Byமாலை மலர்21 May 2022 11:35 AM GMT (Updated: 21 May 2022 11:35 AM GMT)
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது.
லண்டன்:
உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்தை தீவிரப்படுத்தியது. ரஷிய ராணுவம் அந்த ஆயுதங்கள் வரும் வாகனங்களை இடைமறித்து அழிக்க முயற்சிக்கிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது மற்றும் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மறைமுக போருக்கு சமம் என்று ரஷியா கூறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X