என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியாவில் கொரோனா பலி அதிகரிப்பு- பணியாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை
Byமாலை மலர்20 Oct 2021 7:22 PM GMT (Updated: 20 Oct 2021 7:22 PM GMT)
பணியாளர்கள் ஒரு வாரம் அலுவலகங்கள் வர வேண்டியதில்லை. அவர்களுக்கு விடுமுறை. அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்.
மாஸ்கோ:
ரஷியாவில் கொரோனாவால் ஏற்படுகிற பலிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,028 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 26 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல், உயிரிழப்புகளை தடுக்க அங்குள்ள புதின் அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
இதன்படி பணியாளர்கள் ஒரு வாரம் அலுவலகங்கள் வர வேண்டியதில்லை. அவர்களுக்கு விடுமுறை. அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்.
இதற்கான முடிவு, மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் புதினும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த திட்டம் வரும் 30-ந் தேதி முதல் ஒரு வாரம் அமலில் இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X