என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூக்கால் உறிஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து
Byமாலை மலர்19 Oct 2021 10:45 AM GMT (Updated: 19 Oct 2021 10:45 AM GMT)
கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பீஜிங்:
கொரோனாவை முன் கூட்டியே தடுப்பதற்காக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தநிலையில் சீனா மூக்கினால் உறிஞ்சும் தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறது. சீனாவில் உள்ள கேன்சினோ பயாலஜிக்கல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இதுபற்றிய ஆய்வுகளை பல கட்டங்களாக நடத்தியது. அதில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் தயாரித்துள்ள சில தடுப்பூசிகள் சரியாக வேலை செய்யவில்லை.
கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சீனா தயாரித்துள்ள இந்த மருந்து அவற்றையும் கட்டுப்படுத்தும் என்று கூறுகிறது.
அதுமட்டுமல்ல இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த மருந்துக்கும் இல்லாத அதிக சக்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை செலுத்தினால் உடலில் 250-ல் இருந்து 300 மடங்கு எதிர்ப்பு சக்தி உருவாகுவதாக கூறி உள்ளனர்.
இந்த தகவலை சீனாவில் உள்ள ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கொரோனாவை முன் கூட்டியே தடுப்பதற்காக பல்வேறு தடுப்பூசி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தநிலையில் சீனா மூக்கினால் உறிஞ்சும் தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறது. சீனாவில் உள்ள கேன்சினோ பயாலஜிக்கல் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இதுபற்றிய ஆய்வுகளை பல கட்டங்களாக நடத்தியது. அதில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக சீனா அறிவித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் தயாரித்துள்ள சில தடுப்பூசிகள் சரியாக வேலை செய்யவில்லை.
கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சீனா தயாரித்துள்ள இந்த மருந்து அவற்றையும் கட்டுப்படுத்தும் என்று கூறுகிறது.
அதுமட்டுமல்ல இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த மருந்துக்கும் இல்லாத அதிக சக்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை செலுத்தினால் உடலில் 250-ல் இருந்து 300 மடங்கு எதிர்ப்பு சக்தி உருவாகுவதாக கூறி உள்ளனர்.
இந்த தகவலை சீனாவில் உள்ள ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X