என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கை முன்னாள் மந்திரி உயிரிழப்பு
Byமாலை மலர்24 Aug 2021 7:04 PM GMT (Updated: 24 Aug 2021 7:04 PM GMT)
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,446 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 190 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு:
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதித்த மங்கல சமரவீரா (65), கொழும்புவில் உள்ள லங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர தொற்று பாதிப்புக்கு உள்ளான அவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியாக 2005- 2007 மற்றும் 2015-2017 வரை என இருமுறை பதவி வகித்துள்ளார். தாராளவாத ஜனநாயக அரசியலின் ஆதரவாளரான சமரவீரா 1994 முதல் நிதி அமைச்சகம் உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார். அரசியலில் இருந்து கடந்த ஆண்டு சமரவீரா விலகியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X