என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா
Byமாலை மலர்6 May 2021 12:10 AM GMT (Updated: 6 May 2021 12:10 AM GMT)
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 2-ந்தேதி போய் சேர்ந்தது.
ஜோகன்னஸ்பெர்க்:
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 2-ந்தேதி போய் சேர்ந்தது. இதில் பிலிப்பைன்சை சேர்ந்த ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கப்பல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 14 ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த கப்பல் துறைமுகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேயும், கப்பலுக்கு உள்ளேயும் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த கப்பல் துறைமுகத்தை அடைந்தவுடன் அதில் இருந்த பொருட்களை இறக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருகின்றன.
இதைப்போல கப்பல் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்த கப்பலில் பணியில் இருந்த தலைமை பொறியாளர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாகவும், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும் கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 2-ந்தேதி போய் சேர்ந்தது. இதில் பிலிப்பைன்சை சேர்ந்த ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கப்பல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 14 ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த கப்பல் துறைமுகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேயும், கப்பலுக்கு உள்ளேயும் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த கப்பல் துறைமுகத்தை அடைந்தவுடன் அதில் இருந்த பொருட்களை இறக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருகின்றன.
இதைப்போல கப்பல் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்த கப்பலில் பணியில் இருந்த தலைமை பொறியாளர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாகவும், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும் கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X