search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    அமீரகத்தில் ஒரே நாளில் 2,081 பேருக்கு கொரோனா

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 232 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 4 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

    இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,842 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,565 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16 ஆயிரத்து 387 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக அமீரகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், நேற்று இந்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×