என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை
Byமாலை மலர்4 April 2021 9:01 PM GMT (Updated: 4 April 2021 9:01 PM GMT)
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் திட்டமிட்டதை விட வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் புதிய சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கவனித்து வரும் வெள்ளை மாளிகை டாக்டர் சைரஸ் ஷாப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் அமெரிக்காவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டுள்ளதாகவும், 5 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 785 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் திட்டமிட்டதை விட வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் புதிய சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கவனித்து வரும் வெள்ளை மாளிகை டாக்டர் சைரஸ் ஷாப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் அமெரிக்காவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டுள்ளதாகவும், 5 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 785 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X