என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடியில் ராணுவ ஒப்பந்தம்
Byமாலை மலர்21 Feb 2021 8:57 AM GMT (Updated: 21 Feb 2021 8:57 AM GMT)
மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மாலி:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான நேற்று இந்தியா சார்பில் ஒரு லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவுக்கு வழங்கினார். 5 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாம் நாளான இன்று மாலத்தீவு ராணுவ மந்திரி மரிய திதியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான (இந்திய ரூபாய் மதிப்பில் 362 கோடி) ராணுவ கடன் வரம்பு ஒப்பந்தத்தில் (எல்ஓசி) இருவரும் கையெழுத்திட்டனர்.
இந்த புகைப்படத்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியா எப்போதும் மாலத்தீவின் நம்பகமான பாதுகாப்பு பார்ட்னராக இருக்கும், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் மாலத்தீவின் கடலோர காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று ஜெய்சங்கர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X