search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோயாளி
    X
    கொரோனா நோயாளி

    மெக்சிகோவில் பெருகும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது

    மெக்சிகோ நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் மெக்சிகோ 13-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 061 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.71 லட்சத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×