என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும் - ஐ.நா. எச்சரிக்கை
Byமாலை மலர்16 Feb 2021 7:59 PM GMT (Updated: 16 Feb 2021 7:59 PM GMT)
ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபிடாவ்:
மியான்மரில் கடந்த 1ந் தேதி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்தது.
அதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் ராணுவ ஆட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளதால் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மியான்மர் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பாதுகாப்பு படைகள் தங்களது கடமையை செய்வதற்கு தடையாக இருக்கும் மக்கள் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐநாவின் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷிரானர் புர்கெனர் கூறுகையில் "அமைதியான போராட்டத்தின் உரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும். எனவே மக்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும்" என கூறினார்.
மியான்மரில் கடந்த 1ந் தேதி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்தது.
அதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் ராணுவ ஆட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளதால் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மியான்மர் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பாதுகாப்பு படைகள் தங்களது கடமையை செய்வதற்கு தடையாக இருக்கும் மக்கள் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐநாவின் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷிரானர் புர்கெனர் கூறுகையில் "அமைதியான போராட்டத்தின் உரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும். எனவே மக்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும்" என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X