என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் - அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
Byமாலை மலர்23 Jan 2021 3:09 PM GMT (Updated: 23 Jan 2021 3:09 PM GMT)
அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோ பைடன்,
என்றார்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளைமாளிகையில் இன்று அமெரிக்கர்களுக்கு உணவு உதவி உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கும் சிறப்பு உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவுகளை விரைவில் நிறைவேற்ற பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தரும்படி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோ பைடன்,
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனாவால் ஏற்கனவே 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டும். மக்கள் பசியால் பாதிக்கப்படலாம். மக்கள் வெளியேற்றப்படுவதற்கான ஆபத்து உள்ளது. வேலை இழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம். நாம் உடனடியாக செயல்பட வேண்டும்.
நாம் தேசிய அவசரநிலையில் உள்ளோம். தேசிய அவசரநிலையில் உள்ளது போல் நாம் செயல்பட வேண்டும்.
என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X