என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்
Byமாலை மலர்23 Jan 2021 3:40 AM GMT (Updated: 23 Jan 2021 3:40 AM GMT)
இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி முதல் ஏற்றுமதியாக பிரேசில் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு விமானம் மூலம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
மருந்து ஏற்றுமதி செய்ததற்கு பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனரோ நன்றி தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி என்று போல்சனரோ டுவீட் செய்துள்ளார். உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, சிறந்த நட்பு நாட்டை கொண்டிருப்பது பெருமைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமைக்குரியது என்று பிரதமர் மோடியும் டுவீட் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X