search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அமீரகத்தில் ஒரே நாளில் 3,311 பேர் குணமடைந்தனர்

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 49 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3,491 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 49 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்து 223 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 311 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது. குணமடைபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 5 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 756 ஆக உயர்ந்தது. தற்போது 27 ஆயிரத்து 792 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகத்தில் இதுவரை பொதுமக்களுக்கு மொத்தம் 20லட்சத்து 65 ஆயிரத்து 367 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×