search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    அமீரகத்தில் கொரோனா தொற்று- ஒரே நாளில் 3,407 பேர் பாதிப்பு

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 168 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 7 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25 ஆயிரத்து 655 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×