என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதியாக பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் - ஜோ பைடன்
Byமாலை மலர்9 Jan 2021 8:54 PM GMT (Updated: 9 Jan 2021 8:54 PM GMT)
அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும்புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் என ஜோ பைடன் கூறினார்.
நியூயார்க்:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டின் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.
அவர் பதவிக்கு வந்ததும் தனது முதல் உத்தரவாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்தார்.
அதே போல் இந்தியர்கள் பெருமளவு பயனடையக்கூடிய 'எச் 1 பி' 'எச் 4' போன்ற விசாக்களை பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இதனிடையே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், டிரம்பின் குடியேற்ற கொள்கைகள் மிகவும் கொடூரமானவை எனக் கூறியதோடு நான் பதவிக்கு வந்ததும் பழைய நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் டெலாவர் மாகாணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் தான் பதவியேற்றதும் உடனடியாக குடியேற்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவேன் என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில, “நான் உடனடியாக ஒரு குடியேற்ற மசோதாவை அறிமுகப்படுத்தி, அதனை செயல்படுத்த பொருத்தமான குழுக்களுக்கு அனுப்பி வைப்பேன்” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டின் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.
அவர் பதவிக்கு வந்ததும் தனது முதல் உத்தரவாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்தார்.
அதே போல் இந்தியர்கள் பெருமளவு பயனடையக்கூடிய 'எச் 1 பி' 'எச் 4' போன்ற விசாக்களை பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இதனிடையே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், டிரம்பின் குடியேற்ற கொள்கைகள் மிகவும் கொடூரமானவை எனக் கூறியதோடு நான் பதவிக்கு வந்ததும் பழைய நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் டெலாவர் மாகாணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் தான் பதவியேற்றதும் உடனடியாக குடியேற்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவேன் என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில, “நான் உடனடியாக ஒரு குடியேற்ற மசோதாவை அறிமுகப்படுத்தி, அதனை செயல்படுத்த பொருத்தமான குழுக்களுக்கு அனுப்பி வைப்பேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X