என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை - டிரம்ப் அதிரடி உத்தரவு
Byமாலை மலர்7 Jan 2021 2:21 AM GMT (Updated: 7 Jan 2021 2:21 AM GMT)
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
வாஷிங்டன்:
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா கடந்த ஆண்டு தடை விதித்தது.
இதனை பின்பற்றி அமெரிக்காவும் தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயல்களுக்கு தடை விதித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி சீன அரசுக்கு வழங்குவதாக அந்த தடை உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க வேண்டுமெனில் சீன தொடர்புடைய மென்பொருள் செயலிகளை உருவாக்குபவர்கள் அல்லது கட்டுப்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, அலிபே, கேம்ஸ்கேனர், கியூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் கியூ கியூ, விமேட், வீ சாட் பே மற்றும் டபிள்யூ.பி.எஸ் அலுவலகம் ஆகிய 8 சீன செயலிகளுக்கு தடை விதிக்கபபடுகிறது. இத்தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா கடந்த ஆண்டு தடை விதித்தது.
இதனை பின்பற்றி அமெரிக்காவும் தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயல்களுக்கு தடை விதித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி சீன அரசுக்கு வழங்குவதாக அந்த தடை உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க வேண்டுமெனில் சீன தொடர்புடைய மென்பொருள் செயலிகளை உருவாக்குபவர்கள் அல்லது கட்டுப்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, அலிபே, கேம்ஸ்கேனர், கியூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் கியூ கியூ, விமேட், வீ சாட் பே மற்றும் டபிள்யூ.பி.எஸ் அலுவலகம் ஆகிய 8 சீன செயலிகளுக்கு தடை விதிக்கபபடுகிறது. இத்தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X