என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன
Byமாலை மலர்6 Jan 2021 2:38 AM GMT (Updated: 6 Jan 2021 2:38 AM GMT)
இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்து உள்ளதாக குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்து உள்ளது.
நியூயார்க்:
2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்து உள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும், அன்றைய தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்து உள்ளது.
புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்து உள்ளன.
இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதையடுத்து, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்காளதேசத்தில் 9,236, காங்கோவில் 8,640 குழந்தைகள் பிறந்து இருக்கின்றன.
இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டு உள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்து உள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா போர் தெரிவித்து உள்ளார். 2021-ம் ஆண்டு யுனிசெப் அமைப்பின் 75-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்து உள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும், அன்றைய தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்து உள்ளது.
புத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்து உள்ளன.
இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதையடுத்து, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்காளதேசத்தில் 9,236, காங்கோவில் 8,640 குழந்தைகள் பிறந்து இருக்கின்றன.
இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டு உள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்து உள்ளார்கள். அதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா போர் தெரிவித்து உள்ளார். 2021-ம் ஆண்டு யுனிசெப் அமைப்பின் 75-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X