search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்
    X
    முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்

    பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற 82 வயது முதியவர்

    பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த நிலையில், முதல் தடுப்பூசி 82 வயது நபருக்கு செலுத்தப்பட்டது.
    லண்டன்:

    புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பிரிட்டனில் ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 

    இதனையடுத்து தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதல் தடுப்பூசி, பிரைன் பிங்கர் என்ற 82-வயது நீரிழிவு நோயாளிக்கு போடப்பட்டது. 
    Next Story
    ×