என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் 30 பேர் கைது
Byமாலை மலர்31 Dec 2020 8:53 PM GMT (Updated: 31 Dec 2020 8:53 PM GMT)
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பெஷாவர்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் முஸ்லிம் மதகுருக்கள் தலைமையில் 350-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளி சூறையாடினர். மேலும் கோவிலுக்கு அவர்கள் தீயும் வைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பலர், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சி என்ற பயங்கரவாத கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்த பிராந்தியத்தில் பெரும் அதிர்ச்சியும், இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் நேற்று 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரெஹ்மத் சலாம் கட்டாக் என்பவரும் அடங்குவார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் முஸ்லிம் மதகுருக்கள் தலைமையில் 350-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளி சூறையாடினர். மேலும் கோவிலுக்கு அவர்கள் தீயும் வைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பலர், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சி என்ற பயங்கரவாத கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்த பிராந்தியத்தில் பெரும் அதிர்ச்சியும், இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் நேற்று 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரெஹ்மத் சலாம் கட்டாக் என்பவரும் அடங்குவார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X