என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீனாவுக்கு எதிராக இந்தியாவை தூண்டிவிடுகிறது- அமெரிக்கா மீது ரஷியா குற்றச்சாட்டு
மாஸ்கோ:
ரஷிய சர்வதேச விவகார கவுன்சில் கூட்டத்தில் அந்நாட்டு வெளியுவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் வீடியோ கான்பரன்சில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரே மாதிரியான உலக ஒழுங்கை நிலைநாட்ட மேற்கு நாடுகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அதை ரஷியா-சீனா பின்னர் சமாளிக்கும்.
இந்தியா தற்போது மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான, ஆக்ரோசமான மற்றும் மோசமான கொள்கைகளின் ஒரு பொருளாக இருக்கிறது. இந்தோ- பசிபிக் நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்காவும், மற்றவர்களும் சீன எதிர்ப்பு விளையாட்டுகளில் இந்தியாவை ஈடுபடுத்த முயற்சிக்கின்றனர்.
அதேநேரத்தில் இந்தியாவுடனான எங்கள் நெருங்கிய கூட்டாண்மை மற்றும் சலுகை பெற்ற உறவுகளை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு ரஷியா, சீனா அடிபணிய வாய்ப்பு இல்லை. இந்தோ-பசிபிக் யுக்தியை எதிர்ப்பதில் ரஷியா தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
பல துருவ உலகத்தை உருவாக்குவதற்கான போக்கை நிராகரித்து அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஒரு துருவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சீனா, ரஷியாவை ஒதுக்கி வைத்துள்ளன. மற்ற அனைவரையும் அதில் இழுக்க முயற்சிக்கிறது.
இவ்வாரு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்