என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோ பைடன் மருத்துவ குழுவில் தமிழக மருத்துவர் நியமனம்
Byமாலை மலர்10 Nov 2020 5:37 PM GMT (Updated: 11 Nov 2020 5:55 AM GMT)
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் நியமித்த குழுவில் தமிழக பூர்வீகத்தை சேர்ந்த மருத்துவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 13 பேர் அடங்கிய குழு ஒன்றை ஜோ பிடன் நியமனம் செய்து இருக்கிறார்.
இந்த குழுவில் இந்திய வம்சாவெளியை சேர்ந்த மருத்துவர்களும் இடம்பிடித்து உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட செலின் கவுன்டர் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இடம்பிடித்து இருக்கிறார்.
இவருடன் இந்திய பூர்வீகத்தை சேர்ந்த மருத்துவர் விவேக் மூர்த்தி மற்றும் மருத்துவர் அதுல் கவாண்டே ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர் செலின் கவுண்டர் ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலையம் கிராமத்தை சேர்ந்த ராஜ் நடராஜன் கவுண்டருக்கு மகளாக பிறந்தார். செலின் கவுண்டர் நோய் தொற்று அறிவியில் பாட பிரிவில் பட்டம் பெற்று இருக்கிறார். மேலும் இவர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் பயின்று நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசரியராக பணியாற்றி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X