search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்தது.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. 

    குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் உயிரிழந்துள்ளனர். 

    அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,039 பேரும், மெக்சிகோவில் 643 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 47 லட்சத்து 39 ஆயிரத்து 916 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 81 ஆயிரத்து 186 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    கொரோனாவில் இருந்து 3 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 527 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

    அமெரிக்கா - 2,33,122
    பிரேசில் - 1,58,468
    இந்தியா - 1,20,010
    மெக்சிகோ - 89,814
    இங்கிலாந்து - 45,675
    இத்தாலி - 37,905
    பிரான்ஸ் - 35,785
    ஸ்பெயின் - 35,466
    பெரு - 34,315
    ஈரான் - 33,714

    Next Story
    ×