search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    அமீரகத்தில் 1,578 பேர் கொரோனாவால் பாதிப்பு

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 483 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 483 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் மொத்த பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மட்டும் 1,550 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6 ஆயிரத்து 872 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×