என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற உள்ளேன் - டிரம்ப் தகவல்
Byமாலை மலர்9 Oct 2020 12:39 AM GMT (Updated: 9 Oct 2020 12:39 AM GMT)
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் அனைவரையும் திரும்பப்பெற உள்ளேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படையினர் அனைவரையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுவதும் வெளியேறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படையினரை அமெரிக்கா வேகமாக குறைத்து வருகிறது.
இதற்கிடையில், வெளிநாடுகள் உள்ள படைவீரர்களை அமெரிக்காவிற்கே திரும்ப அழைப்பது அதிபர் டிரம்பின் கடந்த தேர்தல் அறிக்கையாக இருந்தது. அதன் பகுதியாக ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலான வீரர்களை அமெரிக்கா குறைத்துள்ளது.
தற்போது தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழ்நிலையில் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களை திரும்பப்பெறும் முயற்சியில் அதிபர் டிரம்ப் இறங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) அமெரிக்கா திரும்ப அழைத்து வர உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ’ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள குறைவான எண்ணிக்கையிலான நமது வீரமிகு படைவீரர்கள் அனைவரையும் வரும்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் (டிசம்பர் 25) திரும்பப்பெற உள்ளோம்’ என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் உள்பட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X