என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் உயிரிழப்பு - அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது
Byமாலை மலர்23 Sep 2020 7:53 PM GMT (Updated: 23 Sep 2020 7:53 PM GMT)
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
வாஷிங்டன்:
உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. தொற்றும், உயிரிழப்பும் அங்கு தான் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதில் அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் 33 ஆயிரத்து 92 பேரும், நியூ ஜெர்சியில் 16 ஆயிரத்து 69 பேரும் பலியாகி இருக்கிறார்கள். பெனிசில்வேனியா உள்ளிட்ட இடங்களில் 7 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த மே 27-ந்தேதி வரை, அமெரிக்காவில் 1 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவால் இறந்திருந்தனர். ஆனால் கிட்டத்தட்ட 4 மாதத்துக்குள் அது 2 மடங்காக உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையே, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பை கவனிக்க தவறினால், அமெரிக்கா பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்று பிரபல தொற்று நோய் தடுப்பு மருத்துவர் அந்தோணி பவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. தொற்றும், உயிரிழப்பும் அங்கு தான் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதில் அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் 33 ஆயிரத்து 92 பேரும், நியூ ஜெர்சியில் 16 ஆயிரத்து 69 பேரும் பலியாகி இருக்கிறார்கள். பெனிசில்வேனியா உள்ளிட்ட இடங்களில் 7 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த மே 27-ந்தேதி வரை, அமெரிக்காவில் 1 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவால் இறந்திருந்தனர். ஆனால் கிட்டத்தட்ட 4 மாதத்துக்குள் அது 2 மடங்காக உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையே, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பை கவனிக்க தவறினால், அமெரிக்கா பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்று பிரபல தொற்று நோய் தடுப்பு மருத்துவர் அந்தோணி பவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X