என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இம்மாதம் 26-ந் தேதி பிரதமர் மோடி ஐ.நா.சபையில் பேசுகிறார்
Byமாலை மலர்2 Sep 2020 6:48 PM GMT (Updated: 2 Sep 2020 6:48 PM GMT)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் 26-ந் தேதி பிரதமர் மோடி பேசுகிறார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா.சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் ஐ.நா.சபை காணொலி காட்சி மூலம் நடைபெறுவது இதுவே முதல் தடவை ஆகும். கொரோனா பரவலின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உறுப்பு நாடுகளின் தலைவர்கள் யாரும் பொதுச்சபை கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளமாட்டார்கள். தங்கள் நாடுகளில் இருந்த படியே தலைவர்களின் நிகழ்த்தும் 15 நிமிட வீடியோ உரை சபையில் ஒலிபரப்பப்படும். கொரோனா பரவலின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் பேசும் தலைவர்களின் தற்காலிக பட்டியலை ஐ.நா.சபை நிர்வாகம் தற்காலிகமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி பிரேசியல் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ முதன் முதலாக பேசுகிறார். இரண்டாவதாக வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி பேசுவார். அதன்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றுவார்.
இந்த பட்டியலின்படி பிரதமர் மோடி பிரதமர் மோடி 26-ந் தேதி உரையாற்றுகிறார். பேசும் தலைவர்களின் பட்டியலில் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல மேக்ரான் ஆகியோரும் இடம் பெற்று உள்ளன.
இது தற்காலிக பட்டியல் என்பதால் இன்னும் சில நாட்களில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான் எந்தெந்த தலைவர்கள் பேசுவார்கள் என்பது உறுதியாக தெரியவரும்.
செப்டம்பர் 30-ந் தேதி பல்லுயிர் பெருக்க உச்சி மாநாடும், அக்டோபர் 1-ந் தேதி 4-வது உலக மகளிர் மாநாடும், அக்டோபர் 2-ந் தேதி அணுஆயுத ஒழிப்பு ஆதரவு நாள் மாநாடும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. ஐ.நா.சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் ஐ.நா.சபை காணொலி காட்சி மூலம் நடைபெறுவது இதுவே முதல் தடவை ஆகும். கொரோனா பரவலின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உறுப்பு நாடுகளின் தலைவர்கள் யாரும் பொதுச்சபை கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளமாட்டார்கள். தங்கள் நாடுகளில் இருந்த படியே தலைவர்களின் நிகழ்த்தும் 15 நிமிட வீடியோ உரை சபையில் ஒலிபரப்பப்படும். கொரோனா பரவலின் காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் பேசும் தலைவர்களின் தற்காலிக பட்டியலை ஐ.நா.சபை நிர்வாகம் தற்காலிகமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி பிரேசியல் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ முதன் முதலாக பேசுகிறார். இரண்டாவதாக வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி பேசுவார். அதன்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றுவார்.
இந்த பட்டியலின்படி பிரதமர் மோடி பிரதமர் மோடி 26-ந் தேதி உரையாற்றுகிறார். பேசும் தலைவர்களின் பட்டியலில் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல மேக்ரான் ஆகியோரும் இடம் பெற்று உள்ளன.
இது தற்காலிக பட்டியல் என்பதால் இன்னும் சில நாட்களில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான் எந்தெந்த தலைவர்கள் பேசுவார்கள் என்பது உறுதியாக தெரியவரும்.
செப்டம்பர் 30-ந் தேதி பல்லுயிர் பெருக்க உச்சி மாநாடும், அக்டோபர் 1-ந் தேதி 4-வது உலக மகளிர் மாநாடும், அக்டோபர் 2-ந் தேதி அணுஆயுத ஒழிப்பு ஆதரவு நாள் மாநாடும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X