என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்து 22 அகதிகள் பலி
Byமாலை மலர்24 Aug 2020 9:59 PM GMT (Updated: 24 Aug 2020 9:59 PM GMT)
லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் சிறிய படகில் சென்ற 22 அகதிகள் நீரில் மூழ்கி பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது.
திரிபோலி:
உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியாக கடலில் சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இது போன்ற பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகில் பயணம் செய்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இந்த படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது. லிபிய கடலோர காவல் படையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமை இதே ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியாக கடலில் சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இது போன்ற பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் லிபியாவின் ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் சிலர் சிறிய படகில் பயணம் செய்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இந்த படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இதை கண்டதும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என தெரிகிறது. லிபிய கடலோர காவல் படையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமை இதே ஜாவ்ரா கடல் பகுதியில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உள்பட 45 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X