search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு கவிழ்ந்து விபத்து"

    • பாக்மதி நிதியை கடக்கும்போது கவிழ்ந்து விபத்து
    • மீட்புப் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

    பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுபுர் பாத்தி காட் இடையே, 30 குழந்தைகளை படகு ஒன்று பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தண்ணீர் தத்தளித்தனர்.

    உடனடியாக மீட்புப்பணி நடைபெற்றது. இதன் பயனாக 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால், 10 குழந்தைகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தத் தகவல் அறிந்ததும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ''மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்யும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • கேரளாவில் கனமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே அங்குள்ள கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய போதிலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மழைக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த போதிலும் கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் கோட்டயம், குட்டநாடு, திருவல்லா ஆகிய தாலுக்காக்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாச்சேரி, வைக்கம் தாலுகாக்களில் தற்காலிக நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல் பத்தனம்திட்டா மாவட்டத்திலும் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்கு டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அவற்றை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களும் கவனமாக இருக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    கேரளாவில் கனமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே அங்குள்ள கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை திருவனந்தபுரம் முதலை பொழியில் மீன்பிடி படகு கவிழ்ந்தது.

    அதில் இருந்த 4 மீனவர்கள் கடலுக்குள் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ரோந்து படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவரான புதுக்குறிச்சியைச் சேர்ந்த குஞ்சுமோன் என்பவர் பிணமாக மீட்கப்பட்டார்.

    மற்ற 3 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் படகுகளில் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர்.

    திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேலும் பலர் படகில் தங்களது பைக்குகளை எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக பளு காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை தேடி வருகின்றனர்.

    திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
    • அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து நேற்று மதியம் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.

    மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது.

    படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.

    அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

    மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இந்தோனேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
    • அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்தப் படகு புளாவ் புருங் என்ற இடத்தின் அருகிலுள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தைகள், பெண்கள் என 58 பேரை மீட்டனர்.

    திடீரென ஏற்பட்ட விபத்தால் 11 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் 10 பேர் மாயமாகினர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில், அதிகமான பாரத்தை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    ×