என் மலர்
நீங்கள் தேடியது "Mozambique"
- படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
- இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்-இல் உள்ள பெய்ரா துறைமுக பகுதியில் நேற்று, படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 5 பேர் காணாமல் போனதாகவும் மொசாம்பிக் நாட்டில் செயல்படும் இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
கடற்கரைக்கு அருகில் கடலில் நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பலுக்கு வழக்கம்போல் பணியாளர்களை படகில் ஏற்றிச் சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்தது. படகு கவிழ்ந்தபோது அதில் 14 இந்திய பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதவிவிட்டுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள பால்மா என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் அப் சபாப் பயங்கரவாத குழு இயங்கி வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து பால்மா கிராம தலைவர் போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் கிராமத்துக்குள் நுழைந்து கிராம தலைவர் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடக்கம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாகாண போலீசார் கூறியுள்ளனர்.






