search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது

    பாகிஸ்தானில் ஒரே நாளில் 634 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.84 லட்சத்தைக் கடந்தது.
    இஸ்லாமாபாத்:

    உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

    இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.84 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,121 ஆக உயர்ந்துள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று 634 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,082 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

    உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 14-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×