search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அமெரிக்காவில் ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ்

    உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70 ஆயிரத்து 862 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 11 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 537 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

    அமெரிக்கா - 47,05,847
    பிரேசில் - 26,66,298
    இந்தியா - 16,38,871 
    ரஷியா - 8,39,981
    தென் ஆப்பிரிக்கா - 4,93,183
    மெக்சிகோ - 4,16,179
    பெரு - 4,07,492
    சிலி - 3,55,667
    ஸ்பெயின் - 3,35,602
    ஈரான் - 3,04,204
    இங்கிலாந்து - 3,03,181
    Next Story
    ×