என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா
Byமாலை மலர்4 July 2020 2:22 PM GMT (Updated: 4 July 2020 2:22 PM GMT)
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரோனாவிடம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர் ஷேபாஸ் ஷெரீப், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கெய்சர், சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இதைப்போல கொரோனாவிடம் சிக்கிய பல்வேறு தலைவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இன்று (நேற்று) பிற்பகலில் எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறைவன் அருளால் வலிமையாகவும், சக்தியாகவும் உணர்கிறேன். எனது பணிகளை வீட்டில் இருந்தவாறே தொடர்வேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தியுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
வெளியுறவு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள விவகாரம் பாகிஸ்தான் அரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரோனாவிடம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர் ஷேபாஸ் ஷெரீப், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கெய்சர், சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இதைப்போல கொரோனாவிடம் சிக்கிய பல்வேறு தலைவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இன்று (நேற்று) பிற்பகலில் எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறைவன் அருளால் வலிமையாகவும், சக்தியாகவும் உணர்கிறேன். எனது பணிகளை வீட்டில் இருந்தவாறே தொடர்வேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தியுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
வெளியுறவு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள விவகாரம் பாகிஸ்தான் அரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X