என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு எதிரான போரில் புத்தரை நினைவுகூர்ந்த ஐ.நா. சபை
Byமாலை மலர்4 July 2020 7:12 AM GMT (Updated: 4 July 2020 7:12 AM GMT)
புத்தர்பிரானின் போதனைகள், கொரோனாவுக்கு எதிரான போரில் நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துவதாக ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
நியுயார்க்:
புத்தர்பிரான் பிறப்பையும், ஞானம் அடைந்ததையும் குறிக்கும் வகையில் புத்த பூர்ணிமா எப்போதும் மே மாதம் கொண்டாடப்படும். இந்த முறை, கொரோனா வைரஸ் பரவலால் இந்த நாளை ஐ.நா. சபை தாமதமாக கொண்டாடியது. இதையொட்டி ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஒரு செய்தி விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், புத்தர்பிரான் வலியுறுத்திய ஒற்றுமையும், பிறருக்கு சேவை செய்வதும் முன் எப்போதையும் விட இப்போது முக்கியமானது. உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயின் சமூக, பொருளாதார விளைவுகளை நாடுகளால் சமாளிக்க முடியும். புத்தர்பிரானின் போதனைகள், கொரோனா வைரஸ் விடுக்கிற சவால்களை சந்திப்பதற்கு நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துகின்றன. நாம் நமது ஆற்றல்களையும், நிபுணத்துவத்தையும் இணைப்பதின்மூலம் மட்டுமே இன்று நம் உலகில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களை சரி செய்ய முடியும். சர்வதேச ஒத்துழைப்பின்மூலம் மட்டுமே பொருளாதார, சமூக பாதிப்புகளை எளிதாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புத்தர்பிரான் பிறப்பையும், ஞானம் அடைந்ததையும் குறிக்கும் வகையில் புத்த பூர்ணிமா எப்போதும் மே மாதம் கொண்டாடப்படும். இந்த முறை, கொரோனா வைரஸ் பரவலால் இந்த நாளை ஐ.நா. சபை தாமதமாக கொண்டாடியது. இதையொட்டி ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஒரு செய்தி விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், புத்தர்பிரான் வலியுறுத்திய ஒற்றுமையும், பிறருக்கு சேவை செய்வதும் முன் எப்போதையும் விட இப்போது முக்கியமானது. உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயின் சமூக, பொருளாதார விளைவுகளை நாடுகளால் சமாளிக்க முடியும். புத்தர்பிரானின் போதனைகள், கொரோனா வைரஸ் விடுக்கிற சவால்களை சந்திப்பதற்கு நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துகின்றன. நாம் நமது ஆற்றல்களையும், நிபுணத்துவத்தையும் இணைப்பதின்மூலம் மட்டுமே இன்று நம் உலகில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களை சரி செய்ய முடியும். சர்வதேச ஒத்துழைப்பின்மூலம் மட்டுமே பொருளாதார, சமூக பாதிப்புகளை எளிதாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X