என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
Byமாலை மலர்4 July 2020 3:00 AM GMT (Updated: 4 July 2020 3:00 AM GMT)
வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை வரும் 10-ந்தேதி முதல் கிடையாது என்று அந்நாட்டின் போக்குவரத்து மந்திரி தெரிவித்துள்ளார்.
லண்டன்:
50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8-ந்தேதி முதல் அமலில் இருந்து வந்தது.
வரும் 10-ந் தேதி முதல் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் நேற்று வெளியிட்டார். முன்னணி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இங்கிலாந்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.85 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று (சனிக்கிழமை) முதல் அங்கு ஓட்டல்கள், உணவு விடுதிகள் தற்காலிகமாக திறக்கப்படுகின்றன.
50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்து வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8-ந்தேதி முதல் அமலில் இருந்து வந்தது.
வரும் 10-ந் தேதி முதல் இந்த கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் நேற்று வெளியிட்டார். முன்னணி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இங்கிலாந்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.85 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று (சனிக்கிழமை) முதல் அங்கு ஓட்டல்கள், உணவு விடுதிகள் தற்காலிகமாக திறக்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X