என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவால் சீனா கவலை
Byமாலை மலர்1 July 2020 3:34 AM GMT (Updated: 1 July 2020 3:34 AM GMT)
சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.
பீஜிங் :
சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-
இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம். வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களிடம், சர்வதேச சட்டங்களையும், உள்ளூர் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து நடக்குமாறு சீன அரசு எப்போதும் சொல்லி வருகிறது. அதுபோல், சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்வது இந்தியாவின் கடமை. இந்தியா-சீனா இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, இருதரப்புக்குமே நல்லது. ஆனால், இதை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:-
இந்தியா வெளியிட்ட அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. நிலைமையை ஆய்வு செய்து வருகிறோம். வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களிடம், சர்வதேச சட்டங்களையும், உள்ளூர் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து நடக்குமாறு சீன அரசு எப்போதும் சொல்லி வருகிறது. அதுபோல், சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களின் சட்டரீதியான உரிமைகளை உறுதி செய்வது இந்தியாவின் கடமை. இந்தியா-சீனா இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு, இருதரப்புக்குமே நல்லது. ஆனால், இதை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X