என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை கடந்தது
Byமாலை மலர்30 Jun 2020 12:57 AM GMT (Updated: 30 Jun 2020 12:57 AM GMT)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைக் கடந்துள்ளது.
வாஷிங்டன்:
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருவது அங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.81 லட்சத்தைத் தாண்டியது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 11.06 லட்சத்தைக் கடந்துள்ளது .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X