என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து
Byமாலை மலர்23 Jun 2020 12:21 PM GMT (Updated: 23 Jun 2020 12:21 PM GMT)
ஜப்பானில் அமெரிக்க விமானப்படை தளத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டவில்லை.
டோக்கியோ:
ஜப்பானின் ஒக்கினாவா மாகாணத்தில் உள்ள கதினாவ நகரில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய விமானப்படை தளம் உள்ளது.
சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமானப்படைத் தளத்தில் 25 ஆயிரத்து 800 அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினர் 19,000 பேரும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இந்த விமானப்படை தளத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது. வெடிபொருட்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கில் தீ பிடித்தது.
மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் விமானப் படைத்தளத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து விமானப் படை தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒக்கினாவா மாகாணத்தில் உள்ள கதினாவ நகரில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய விமானப்படை தளம் உள்ளது.
சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமானப்படைத் தளத்தில் 25 ஆயிரத்து 800 அமெரிக்க வீரர்களும், அவர்களது குடும்பத்தினர் 19,000 பேரும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இந்த விமானப்படை தளத்தில் திடீர் தீ விபத்து நேரிட்டது. வெடிபொருட்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக் கிடங்கில் தீ பிடித்தது.
மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் விமானப் படைத்தளத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து விமானப் படை தளத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X