search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெறும் நோயாளி
    X
    சிகிச்சை பெறும் நோயாளி

    அதிரும் பிரேசில் - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.5 லட்சத்தை தாண்டியது

    பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஐந்தரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    ரியோ டி ஜெனிரோ:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 200-ஐ தாண்டியது.

    மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
    Next Story
    ×