என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்4 May 2020 7:33 AM GMT (Updated: 4 May 2020 7:33 AM GMT)
சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்:
உலகம் முழுவதும் 212 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், 2.28 லட்சம் மக்களை பலி வாங்கி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சிங்கப்பூரில் 18,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் ஏப்ரல் இறுதி வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள இந்தியர்களில் 90 சதவீதம் பேர், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலும் நெரிசல் மிகுந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள். நோய்த்தோற்று கண்டறியப்பட்டுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு தீவிரம் இல்லை என்றும், உடல்நிலை தேறி வருவதாகவும் இந்திய தூதர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X