என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
கொரோனாவில் இருந்து மீண்ட 7 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 26 லட்சத்து 14 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 920 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 671 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவின் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 467 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 319 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story