என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சுறுத்தல் - சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்.30 வரை நீடித்தது நேபாளம்
Byமாலை மலர்7 April 2020 1:00 PM GMT (Updated: 7 April 2020 1:00 PM GMT)
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேபாள அரசு சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
காத்மண்டு:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை நாடான நேபாளம் உள்ளூர் விமான சேவைக்கு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் உலகையே தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், நேபாள அரசு சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X